close
Choose your channels

தோளுக்கு மேல் வளர்ந்த சிம்ரன் மகன்கள்.. க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

Wednesday, August 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சிம்ரன் தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அதில் அவருடைய இரண்டு மகன்களும் அவருடைய தோளுக்கு மேல் வளர்ந்து பெரிய பையன்கள் ஆகி இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

தமிழ் திரையுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சிம்ரன் என்பதும் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சரத்குமார், விஜயகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் தீபக் பாகா என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது அவர் தனது இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

அந்த புகைப்படத்தில் தனது மகன்கள் சிறுவர்களாக இருந்தபோது உள்ள புகைப்படத்தையும் தற்போது இருக்கும் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவு செய்துள்ளார். தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் மற்றும் கணவருடன் இருக்கும் சிம்ரன் குடும்பத்தின் க்யூட் புகைப்படங்களுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.