close
Choose your channels

முதல்முறையாக 2வது குழந்தையின் புகைப்படத்தை பதிவு செய்த பிரபல நடிகை: நெட்டிசன்கள் வாழ்த்து

Friday, August 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த ’என்னவளே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’ஆனந்தம்’ ’ஏப்ரல் மாதத்தில்’ ’விரும்புகிறேன்’ ’வசீகரா’ ’ஜனா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சினேகா.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு ’அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்த படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்து அதன் பின்னர் அவரை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற மகன் பிறந்தார் என்பதும் அதன்பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் ஆத்யந்தா என்ற மகளும் பிறந்தனர் என்பது தெரிந்ததே.

இரண்டாவது மகள் ஆத்யந்தா பிறந்து 8 மாதம் ஆகியும் அந்த குழந்தையின் புகைப்படத்தை இதுவரை வெளியிடாமல் இருந்த நடிகை சினேகா, தற்போது முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டாவது குழந்தை ஆத்யந்தா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இன்று தனது கணவர் பிரசன்னாவின் பிறந்தநாளை அடுத்து அவருக்கு தனது வாழ்த்துக்களை சினேகா கூறியுள்ளார்.

இன்றைய சந்தோஷமான தினத்தில் தனது அன்பு மகள் ஆத்யந்தாவை உங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் சினேகா தெரிவித்துள்ளார். மகளுடன் சினேகா-பிரசன்னா இருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.