close
Choose your channels

ஒவ்வொரு நாளாக எண்ணியது முடிந்துவிட்டது.. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை அறிவித்த சீரியல் நடிகை..!

Friday, May 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சீரியல் நடிகை சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் குழந்தை பிறக்கும் நாட்களை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்த நிலையில் நேற்று தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

’ராஜா ராணி’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் ஸ்ரீதேவி அசோக் என்பதும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அசோக் - ஸ்ரீதேவி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவி அசோக் மீண்டும் கர்ப்பமான நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பிணியாக உள்ள புகைப்படங்கள், வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் டி-ஷர்ட்டில் எண்களை வரைந்து அதில் ஒவ்வொரு நாளும் எத்தனை நாள் கர்ப்பம் என்பதை குறிப்பிடும் வகையில் எண்ணிக் கொண்டிருந்த வீடியோவை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதேவி அசோக்கிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் மகிழ்ச்சியுடன் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.