close
Choose your channels

மீண்டும் ரீஎண்ட்ரி ஆகும் சுகன்யா.. ஆனால் நடிகையாக அல்ல.. புதிய அவதாரம்..!

Wednesday, August 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 90 ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த சுகன்யா நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆக இருப்பதாகவும் ஆனால் நடிகையாக இல்லாமல் பாடலாசிரியராக அவர் அறிமுகமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ’புது நெல்லு புது நாற்று’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுகன்யா. அதன் பிறகு அவர் கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உட்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சுகன்யா நடிகையாக மட்டுமின்றி பரதநாட்டிய கலைஞராக இருந்தார் என்பதும் அதுமட்டுமின்றி இசையமைப்பாளர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் புதிதாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார்.

மலையாள படம் ஒன்றில் தமிழ் காட்சிகள் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ் பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும் சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் இந்த பாடலை எழுதியுள்ளார்.

மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற தமிழ் பாடலான இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் எழுத வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு தனது நன்றிகள் என்று சுகன்யா கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.