close
Choose your channels

நடிகை சுனைனா கடத்தப்பட்டாரா..? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Sunday, May 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகில் நடிகை சுனைனா திடீரென கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து போலீசார் இது குறித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

‘காதலில் விழுந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதனை அடுத்து அவர் ’மாசிலாமணி’ ’வம்சம் ’திருத்தணி’ ’சமர்’ ’தெறி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான விஷாலின் ’லத்தி’ திரைப்படத்தில் கூட முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி இவர் ஒரு சில தொலைக்காட்சி சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சுனைனா தற்போது ’ரெஜினா’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் காணாமல் போனதாக ’ரெஜினா’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் சுனைனாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கடத்தப்பட்டாரா? என்ற கேள்வியுடன் அந்த வீடியோ முடிந்திருந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனதை அடுத்து காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக இந்த வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனத்தை விசாரணை சென்றபோது தான் ’ரெஜினா’ படத்தின் புரமோஷனுக்காக இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் படக்குழுவினரை எச்சரித்துவிட்டு கிளம்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.