close
Choose your channels

சினிமா தொழிலாளர்களுக்காக 3 லட்சம் கொடுத்த பிரபல நடிகை!

Sunday, April 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஊரடங்கால் படப்பிடிப்பு இன்றி கஷ்டப்பட்டு வரும் தொழிலாளர்களுக்கு பல நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்து வருவதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். ஒருசிலர் மூட்டைக்கணக்கில் அரிசி பருப்புகளும் தொழிலாளர்களுக்காக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகை தமன்னா, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்காக 3 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். இந்த பணத்தை அவர் Corona Crisis Charity என்ற அமைப்புக்கு கொடுத்துள்ளார். ஏற்கனவே தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் ரூ.2 லட்சம் அளித்த நிலையில் தற்போது தமன்னா ரூ.3 லட்சம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு திரையுலகிலும் தமன்னா முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் அவர் தற்போது தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். விரைவில் அவர் தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கும் நிதியுதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.