close
Choose your channels

7 வருடங்களுக்கு முன் மக்கள் என் பெயரை மாற்றிவிட்டார்கள்: தமன்னா நெகிழ்ச்சி

Sunday, July 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஏழு வருடங்களுக்கு முன் மக்கள் என் பெயரை மாற்றி விட்டார்கள் என்றும் என்னை புதிய பெயரில் அவர்கள் அழைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நடிகை தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா நடித்த திரைப்படம் ’பாகுபலி’. 'பாகுபலி’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு இதேநாள் அதாவது ஜூலை 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் ரிலீஸாகி இன்றுடன் 7 வருடங்கள் ஆகிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அவந்திகா என்ற கேரக்டரில் தமன்னா நடித்து இருந்தார் என்பதும், அவரது கேரக்டருக்கு பாகுபலி முதல் பாகத்தில் அதிக முக்கியத்துவம் இருந்தது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் மக்கள் தமன்னாவை ’அவந்திகா’ என்றே சமூக வலைத்தளங்களில் அழைத்து வருவது தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில்’ ஏழு வருடங்களுக்கு ’ பிறகும் என்னை மக்கள் அவந்திகா என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று கூறினார். மேலும் ’உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மிகப்பெரிய பெருமை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.