close
Choose your channels

திட்டமிட்ட நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த நடிகை: சித்ரா ரசிகர்கள் காரணமா?

Thursday, December 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து நேரலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்த நடிகை ஒருவர் அந்த நிகழ்ச்சியைத் ரத்து செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் சக நடிகர்-நடிகைகள் மீளாத நிலையில் நடிகை வனிதா இது குறித்து கேள்வி பதில் நேரலை நிகழ்ச்சி ஒன்றை தனது யூட்யூபில் நடத்த திட்டமிட்டிருந்தார்.

இதுகுறித்த அறிவிப்பு ஒன்றும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவானது. நேற்று மாலை 4 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு கடும் கண்டனங்களை சித்ராவின் ரசிகர்கள் தெரிவித்தனர். ஒரு நடிகையின் மரணத்தை வைத்து கூட பணம் சம்பாதிக்க வேண்டுமா? என்ற ரீதியில் பல்வேறு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து இந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்ததாக தெரிகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த பதிவையும் அவர் நீக்கிவிட்டார். சித்ரா ரசிகர்களின் கடுமையான கண்டனத்தின் காரணமாகத்தான் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.