close
Choose your channels

பாலியல் வழக்கு விசாரணையின்போது கதறியழுத பிரபல நடிகை: நீதிமன்றத்தில் பரபரப்பு!

Tuesday, November 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல மலையாள நடிகை ஒருவரின் பாலியல் வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது நீதிமன்றத்தில் கதறி அழுததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பெண் நீதிபதி தலைமையில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணை ஒருதலைபட்சமாக நடப்பதாகவும் எனவே இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் நடிகையின் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்த போது நடிகையின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் வாதாடிய போது ’இந்த வழக்கு ஒருதலைபட்சமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பெண் நீதிபதியாக இருந்த போதிலும் அவரால் நடிகையின் நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

நடிகையை அவமானப்படுத்தும் வகையில் எதிர்தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்டபோது நடிகை பலமுறை கதறி அழும் சூழலில் ஏற்பட்டதாகவும் எனினும் அதனை நீதிபதி தடுக்க முயற்சிக்கவில்லை என்றும் எனவே இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் வரும் 20ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த வழக்கு வேறு வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது வரும் 20ஆம் தேதி தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.