close
Choose your channels

28 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் ராமராஜன் பட நாயகி!

Wednesday, March 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராமராஜன் படத்தில் அறிமுகமான நடிகை 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரை உலகில் ரீ என்ட்ரி ஆக உள்ளார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் ’எங்க ஊரு பாட்டுக்காரன்’. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பானுப்பிரியாவின் தங்கை நிசாந்தி என்ற சாந்திப்ரியா. இவர் அதன்பிறகு தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி உள்பட பல மொழிகளில் நடித்தர் என்பதும், 1994ஆம் ஆண்டு ஒரு இந்தி படத்தில் நடித்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 26 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த நாட்டை தட்டிஎழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.