close
Choose your channels

அரண்மனையை அடுத்து 3ஆம் பாகமாகும் இன்னொரு சுந்தர் சி படம்.. கவின் ஹீரோவா?

Tuesday, February 20, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ திரைப்படம் மூன்று பாகங்கள் ரிலீஸ் ஆகிய நிலையில் நான்காம் பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ’அரண்மனை’ படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் உருவான இன்னொரு திரைப்படமான ’கலகலப்பு’ திரைப்படம் ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளியாகிய நிலையில் தற்போது மூன்றாம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

’கலகலப்பு’ படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது ’கலகலப்பு 3’ படத்திற்கான ஸ்கிரிப்டை சுந்தர் சி தயார் செய்திருப்பதாகவும் ’அரண்மனை 4’ ரிலீஸ் செய்தவுடன் ஆரம்பகட்ட பணியை அவர் ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

’கலகலப்பு’ முதல் பாகத்தில் சிவா மற்றும் விமல் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ஜீவா மற்றும் ஜெய் நடித்திருந்தனர். இந்த நிலையில் ’கலகலப்பு’ மூன்றாம் பாகத்தில் நடிக்க கவின் உடன் சுந்தர் சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இது குறித்த இறுதி முடிவு எடுத்த படம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் படம் உட்பட நான்கு படங்களை கவின் கைவசம் வைத்திருப்பதால் இந்த படத்தை அவர் ஒப்புக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை கவின் தவறவிட மாட்டார் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.