close
Choose your channels

துல்கர் சல்மான், த்ரிஷாவை அடுத்து இன்னொரு பிரபலம்.. 'கமல் 234' படத்தின் மாஸ் அறிவிப்பு..!

Monday, November 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 234’ திரைப்படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷா இணைந்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இன்னொரு பிரபல ஹீரோ இந்த படத்தில் இணைந்துள்ளதை அடுத்து வேற லெவலில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..

கமல்ஹாசனின் 234வது படத்தின் டைட்டில் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் துல்கர் சல்மான் மற்றும் த்ரிஷாவை அடுத்து தற்போது ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கமல்ஹாசன் உடன் ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ளார் என்பதும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை அடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன் வேறு சில அறிவிப்புகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos