close
Choose your channels

வெளியேறியதும் சஞ்சீவ் யாரை பார்த்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Monday, January 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறு அன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படும் நிலையில் நேற்று சஞ்சீவ் வெளியேற்றப்பட்டார் என்பது நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்து இருக்கும், இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் நேராக யாரை பார்த்தார் என்பது குறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷன் செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சஞ்சீவ் வெளியேற்றப்படுவதாக கமலஹாசன் அறிவித்தார்.

அதன்படி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ், நேராக வருண் மற்றும் அக்ஷராவை சந்தித்து உள்ளதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் மற்றும் அக்ஷரா கடந்த ஞாயிறு அன்று ஒரே நாளில் வெளியேற்றப்பட்டனர் என்பதும் பிக்பாஸ் டைட்டில் வருண், அக்சராவுக்கு கிடைக்கவில்லை என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் முன்னரே இருவரும் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos