close
Choose your channels

அசோக்செல்வனின் அடுத்த படத்திலும் 3 நாயகிகள்: யார் யார் தெரியுமா?

Wednesday, August 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர் அசோக்செல்வன் நடித்த ’மன்மதலீலை’ திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடித்து இருந்த நிலையில் தற்போது அவரது அடுத்த படத்திலும் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் ’மன்மதலீலை’. இந்த படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் மற்றும் ஸ்மிருதி வெங்கட்’ என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை கமல்ஹாசனின் உதவி இயக்குனர் சி.எஸ். கார்த்திகேயன் இயக்கி வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் மூன்று நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி ஆகிய மூவர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடிக்க இருப்பதாகவும் மூவருக்கும் சம அளவில் கதையில் முக்கியத்துவம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி காலகட்டத்தில் ரொமான்ஸ் செய்யும் ஹீரோவின் கதைதான் இந்த படம் என்று கூறப்படுகிறது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.