close
Choose your channels

6 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் விஷால்!

Tuesday, March 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

6 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபல இயக்குனருடன் விஷால் இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அவர் தற்போது ’லத்தி,’ ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ’மார்க் ஆண்டனி’ ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் விஷாலின் 31வது 32வது மற்றும் 33வது படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஷாலின் 34வது படத்தை பிரபல இயக்குனர் முத்தையா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ ஸ்டுடியொ மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரடொக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஷால் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ’மருது’ என்ற திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கிய நிலையில் தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.