close
Choose your channels

அரசியலுக்கு வந்த சிவாஜி நிலை தெரியுமா? கமல்ஹாசனுக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் எச்சரிக்கை

Thursday, July 20, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தமிழக அரசு மீது ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு உச்சகட்டமாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த புகார்களை அனுப்பி வையுங்கள் என்று தனது ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதோடு புகார்கள் அனுப்ப வேண்டிய லிங்க்கையும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இதனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர்கள் வரை கமல்ஹாசனை விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு கருத்தை சற்று முன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அரசியல்வாதி என்றால் மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்க வேண்டும். எந்த விதத்தில் கமல் தன்னை அரசியல்வாதி எனக் கூறுகிறார் என்பது தெரியவில்லை.
திரைத்துறையில் கமல்ஹாசன் நல்ல நடிகராக திகழ்ந்தவர். நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் அரசியில் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே மக்கள் புறக்கணித்தார்கள், தோற்கடித்தார்கள் என்பதை கமலஹாசன் உணர வேண்டும்.
அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்க தயாராக உள்ளோம் அவரை அரசியல் களத்தில் சந்திக்க தயாராக உள்ளோம். தமிழக அரசில் ஊழல் இருப்பது உண்மையானால் குற்றம்சாட்டும் கமல் அதனை நிரூபிக்கட்டும். இவ்வாறு அமைச்சர் ஓ. எஸ். மணியன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.