close
Choose your channels

கமல்ஹாசனை யாரும் மிரட்டக்கூடாது: நாஞ்சில் சம்பத்தும் ஆதரவு

Monday, July 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக ஆளும் அதிமுக அரசை கமல் கடுமையாக விமர்சித்து வருகிறார். கமல்ஹாசனின் விமர்சனத்தால் அதிருப்தி அடைந்த தமிழக அமைச்சர்கள் அவரை மிரட்டும் வகையில் பேசி வருகின்றனர். இந்த நிலையில் தினகரன் மற்றும் சசிகலாவின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் 'கமல்ஹாசனை யாரும் மிரட்டக்கூடாது' என்று அவருக்கு ஆதரவு தரும் வகையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கமலை ஒருமையில் பேசுவதும், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் யாரும் மிரட்டக்கூடாது என்று கூறிய நாஞ்சில் சம்பத், தமிழ்திரைக்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைக்கும் எனில் அது நடிகர் கமலால் மட்டுமே என்றும் கூறினார்.
மேலும் ஊழல் நடக்கிறது என்றால் யார் செய்கிறார்கள் என்பதை கமல் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நாஞ்சில் சம்பத், அவல் எங்கே கிடைக்கிறது என ஸ்டாலின் ஏங்கிக்கொண்டிருப்பதாகவும், இந்த நேரத்தில் கமல், ஸ்டாலினுக்கு கிடைத்த அவல்' என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.