close
Choose your channels

மலேசியா இரட்டை கோபுரங்களுக்கு நடுவில் இளம் நடிகை… செம மாஸான புகைப்படம்!

Tuesday, June 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற நடிகை ஒருவர் தனது குடும்பத்துடன் மலேசியா நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் ‘காக்கா முட்டை‘, ‘வடசென்னை‘, ‘க/பெ ரணசிங்கம்’ போன்ற திரைப்படங்களில் நடித்து வரவேற்பு பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ். இவர் ‘கனா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்கத் துவங்கினார். அந்த வகையில் கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள பல திரைப்படங்களில் இவர் நடித்துவரும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் இவருடைய நடிப்பில் ஐந்து திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ள ‘ஃபர்ஹானா‘, ‘தீராக்காதல்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘டிரைவர் ஜமுனா‘, ‘சொப்பன சுந்தரி’ போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தனது குடும்பத்துடன் தற்போது மலேசியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

முன்னதாக மலேசியாவிலுள்ள மேகலா எனும் இடத்திற்குச் சென்ற அவர் விதவிதமான இயற்கை காட்சிகளையும் அங்குள்ள உணவுகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மலேசியாவிலுள்ள டிவின் கோபுரத்திற்கு இடையில் நின்றவாறு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஸை தவிர அவருடைய ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் மலேசியாவின் இரட்டை கோபுரத்திற்கு இடையில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.