close
Choose your channels

மாஸ் நடிகரின் மகள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு: நன்றி சொன்ன தயாரிப்பாளர்!

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் மகள் குழந்தை நட்சத்திரமாக ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் அந்த படம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் மகள் அர்ஹா என்பவர் ’சாகுந்தலம்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். கவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகமான ’அபிஞான சாகுந்தலம்’ என்ற கதையின் அடிப்படையில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் சாகுந்தலம் கேரக்டரில் சமந்தா நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஒன்றில் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு வரும் நான்காவது தலைமுறை நட்சத்திரம் அர்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’சாகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்த படத்தை தயாரிப்பாளர் நீலிமா குணா தனது டுவிட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி சினேகா ஆகிய இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.