close
Choose your channels

இரண்டாம் பாகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் பிரபல நடிகை!

Wednesday, October 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசா, ’ராஜா ராணி’ என்ற தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழைப் பெற்றார் என்பது தெரிந்ததே. அந்த தொடரின் நாயகன் சஞ்சயை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆலியா மானசாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’ராஜா ராணி’ தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஆலியா மானசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தொடரில் அவர் சந்தியா என்ற ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக பல பெண் போலீஸ் அதிகாரிகளின் வீடியோக்களை பார்த்து அவர்களுடைய நடை உடை பாவனைகளை கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார் இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் வடசென்னை ரவுடியாக நடிக்க வேண்டும் என்றும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் திரைப்படங்களில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆல்யா மானசா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை அமைந்தால் கண்டிப்பாக திரைப்படங்களிலும் நடிப்பேன்’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.