close
Choose your channels

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை திணித்து கொடுமை: முன்னாள் கணவர் மீது புகார் அளித்த பிரபல நடிகை!

Friday, April 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து தன்னை கொடுமைப்படுத்தியதாக முன்னாள் கணவர் மீது பிரபல நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் .

இந்த நிலையில் தனது முன்னாள் கணவர் தனது விரலை துண்டித்ததாகவும், தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்து கொடுமைப் படுத்தியதாகவும் அதற்காக 350 கோடி ரூபாய் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தனது பிறப்புறுப்பில் மது பாட்டிலை திணித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்றதற்கான ஆதாரங்களையும் அவர் சமர்ப்பித்தார். இந்த வழக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.