close
Choose your channels

சம்மனுக்கு நாளை ஆஜராக வேண்டிய இயக்குனர் அமீர்.. திடீரென கடிதம் அனுப்பியதால் பரபரப்பு..!

Monday, April 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் விசாரணைக்காக இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் நாளை அவர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நேற்று ஆடியோ வெளியிட்ட அமீர் தன்னுடைய விளக்கத்தை தைரியமாக அளிப்பேன் என்றும் வெற்றியுடன் திரும்பி வருவேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு அமீர் இமெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் டெல்லியில் மூன்று தமிழர்கள் போதைப் பொருளுடன் பிடிபட்ட நிலையில் அதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது.

இதனை அடுத்த தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் அவரது தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருந்த அமீரையும் விசாரணை செய்ய முடிவு செய்து ஏப்ரல் 2ஆம் தேதி அமீர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

இந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் சென்று தன்னுடைய நிலையை விளக்குவேன் என்று நேற்று அமீர் நேற்று ஆடியோ வெளியிட்டிருந்த நிலையில் சற்றுமுன் அவர் ஆஜராக அவகாசம் கேட்டு இமெயில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் அந்த ஈமெயிலில் ரம்ஜான் முடிந்த பிறகு நேரில் ஆஜர் ஆவதாகவும் அதுவரை கால அவகாசம் கேட்டும் கடிதம் எழுதியதாக தெரிகிறது. அமீருக்கு கால அவகாசம் கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.