close
Choose your channels

'அம்மா' பெயரில் புதிய கட்சியை தொடங்கினார் கராத்தே ஹூசைனி.

Saturday, December 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாசியும், கராத்தே கலைஞருமான ஹூசைனி புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இந்த கட்சிக்கு அவர் 'அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு' என்று பெயரிட்டுள்ளார்.

புதிய கட்சி தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தபின்னர் ஹூசனி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் மோசமான அரசியல் நிகழ்வு நடந்து வருவதாகவும், அதை மாறும் வகையில் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் கட்சியை தொடங்குவதற்கு முன்னர் தனது 15 ஆண்டு கால நண்பரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடுவிடம் தான் வாழ்த்து பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் ரசிகன், தொண்டன், விசுவாசி என்று கூறும் ஹூசைனி 'சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைத்தண்டனை பெற்றபோது அவர் விடுதலை பெற வேண்டி தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.