close
Choose your channels

மானநஷ்ட வழக்கு போடுவேன்: 'மாங்கா' பட தயாரிப்பாளருக்கு அன்புச்செழியன் சகோதரர் மிரட்டல்

Saturday, December 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரேம்ஜி அமரன் நடிப்பில் ஆர்.எஸ்.ராஜா இயக்கிய 'மாங்கா' என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சக்திவேல், இந்த படத்தை அன்புச்செழியனின் சகோதரர் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்து தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

அழகர்சாமி ஆகிய நான், எங்களது சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை விநியோகம் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் மீது DreamZone Movies,  திரு சக்திவேல் அவர்கள் 'மாங்கா' என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை கொடுத்ததாகவும், அதன் மூலம் அவர் நஷ்டம் அடைந்ததாகவும் புகார் கொடுத்துள்ளார்.

திரு சக்திவேல் அவர்களை நாங்கள் நேரடியாக சந்தித்ததும் இல்லை, தொலைபேசி வாயிலாக பேசியதும் இல்லை. 'மாங்கா' என்ற திரைப்படத்தை நங்கள் தமிழ்நாடு முழுவதும் விநியோகமும் செய்யவில்லை.

வேண்டுமென்றே எங்கள் மீதும், எங்கள் நிறுவனத்தின் மீது களங்கம் விளைவித்து, மோசடி செய்யும் நோக்கத்தோடு தவறான புகார் அளித்து வருகிறார்

ஆகையால் அவர் மீது நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம் என்பதை இதன்மூலம் தெரிவித்து கொள்கிறோம், என்று அன்புச்செழியனின் சகோதரர் அழகர்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.