close
Choose your channels

ரஜினியின் 'அண்ணாமலை' பாணியில் 'சர்கார்': ராதாரவி

Tuesday, July 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாமலை' திரைப்படத்தில் வில்லனாக நடித்த ராதாரவிதான் 'சர்கார்' படத்திலும் வில்லனாக நடித்து வரும் நிலையில் 'அண்ணாமலை' படத்தின் ஒரு பாணி 'சர்கார்' படத்திலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் ராதாரவி கூறியுள்ளார்.

வில்லனின் மேனரிஸத்தை ஹீரோ ஒரு காட்சியில் செய்து ஹீரோயிசத்தை காட்டுவது எம்.ஜி.ஆர் அவர்களின் பாணி என்றும் இந்த பாணி ரஜினியின் 'அண்ணாமலை படத்தில் ரஜினி செய்தபோது பாராட்டப்பட்டதாகவும், அதே மாதிரியான காட்சி ஒன்று சர்கார்' படத்திலும் இருப்பதாக ராதாரவி கூறியுள்ளார்.

'அண்ணாமலை' படத்தில் 'கூட்டி கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்' என்ற தன்னுடைய வசனத்தை ஒருசரியான காட்சியில் ரஜினி பேசி தனது ஹீரோயிசத்தை காட்டுவார் என்றும், அதே பாணியில் 'சர்கார்' படத்திலும் நான் பேசும் ஒரு வசனத்தை விஜய் பேசி ஹீரோயிசத்தை வெளிப்படுத்துகிறார் என்றும் இந்த காட்சி ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும் ராதாரவி கூறியுள்ளார்.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.