close
Choose your channels

கொரோனா எதிரொலி: தாயம், பல்லாங்குழி விளையாடும் 'அண்ணாத்தே' நாயகி!

Wednesday, March 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அத்தியாவசிய தேவை இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது இதனை அடுத்து பெரும்பாலானோர் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

ஐடி உட்பட அனைத்து துறை ஊழியர்களும் வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘அண்ணாத்தே’ படத்தின் நாயகிகளில் ஒருவரான குஷ்பு, பொழுது போகாமல் வீட்டிலேயே இருப்பதாகவும், வீட்டில் தாயம் பல்லாங்குழி உள்பட ஒரு சில விளையாட்டுகளை குடும்பத்தினர்களுடன் விளையாடுவதாகவும் மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் சினிமா பார்ப்பதும் தான் தனது பொழுதுபோக்காக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது வீடியோகேம்ஸ் புகழ் பெற்று இருந்தாலும் ஒரு காலத்தில் தமிழர்களின் விளையாட்டான தாயம் பல்லாங்குழி ஆகிய விளையாட்டுகளைத்தான் குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் விருப்பத்துடன் விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.