close
Choose your channels

செல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்!

Wednesday, February 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றபோது ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் என்பதும், ஏராளமான ரசிகர்களுடன் அட்டகாசமாக விஜய் எடுத்த இந்த செல்பி புகைப்படம் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாக காத்திருப்பதாக ’மாஸ்டர்’ படக்குழுவினரிடம் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் ’மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது இந்த படத்தின் கலை இயக்குனர் சதீஷ் குமாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் விஜய், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது விஜய்சேதுபதி வழக்கம்போல் சதீஷை கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அருகில் நின்றிருந்த விஜய்யையும் விஜய்சேதுபதி கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த புகைப்படங்கள் விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி செல்பி புகைப்படம் போல் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்துத் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது விஜய்க்கும் முத்தம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.