close
Choose your channels

பிரபல இயக்குனரின் படத்தில் மீண்டும் நடிக்கும் அனுஷ்கா ஷெட்டி!

Tuesday, December 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு திரை உலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் நடித்த பாகுபலி மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு படங்களும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன நிலையில் கடந்த ஆண்டு வெளியான ‘பாகமதி’ என்ற படமும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின் மாதவனுடன் நிசப்தம் என்ற படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார்

ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய ’என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த அனுஷ்கா தற்போது மீண்டும் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் அனுஷ்கா ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரம் எடுக்க இருப்பதாகவும் இந்த படத்தின் கதையை குருதிப்புனல் படத்தின் ஒரிஜினல் படமான துரோக்கால் படத்தின் கதையை எழுதிய கோவிந்த் நிலானி என்பவர் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.