close
Choose your channels

விக்ரமை இயக்குவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'ஐ' படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் '10 எண்றதுக்குள்ள' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 21ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டதால் இரவுபகலாக இந்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் நாயகன் விக்ரம் மற்றும் நாயகி சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விக்ரமை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், 'எனக்கு தெரிந்து ஒரு கேரக்டருக்காக ஒரு நடிகர் இவ்வளவு அதிகமாக ரிஸ்க் எடுப்பவர்களை பார்த்ததில்லை. விக்ரம் ஏற்கனவே அந்நியன், 'ஐ', 10 எண்றதுக்குள்ள' போன்ற வித்தியாசமான கேரக்டரில் நடித்துவிட்டார். இதையெல்லாம் விட சிறப்பாக ஒரு கேரக்டரை நான் உருவாக்கிய பின்னர் அவரை வைத்து கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன்' என்று கூறினார்

விஜய் மில்டன் இந்த நிகழ்ச்சியில் பேசும்போது, 'நான் கோலி சோடா படத்தில் 6 சிறுவர், சிறுமிகளை வைத்து படமெடுத்தேன். ஆனால் இந்த படத்தில் நான் கையாண்டது ஒருசிறுமி மற்றும் ஒரு சிறுவர் மட்டுமே, அவர்கள் விக்ரமும் சமந்தாவும்தான்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.