close
Choose your channels

மேஸ்ட்ரோவின் மந்திரத்திற்கு சரணடைகிறேன்! ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்து..!

Thursday, March 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த பாடல் ஒன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த பாடலை கேட்ட பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் ’என்ன ஒரு பாடல், இந்த பாடலுக்கு நான் சரண் அடைகிறேன்’ என்று பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் உருவாகியுள்ள ’ஆடுஜீவிதம்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசை புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்திருக்கும் நிலையில் அவரது கம்போசிங்கில் உருவான ’பெரியோனே’ என்ற பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் இந்த பாடலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பிரபல இயக்குனர் செல்வராகவன் ’என்ன ஒரு பாடல், இந்த பாடலின் பெருமை குறித்து விளக்க என்னிடம் வார்த்தையே இல்லை, இசைப்புயல் ஆர் ரகுமான் குறித்து நான் என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை, சுருக்கமாக சொல்வதாக இருந்தால் நான் மேஸ்ட்ரோவின் மந்திரத்திற்கு சரணடைந்து விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவனின் இந்த பதிவுக்கு ஏஆர் ரகுமான் நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்திவிராஜ் சுகுமாரன், அமலாபால் நடிப்பில் உருவான இந்த படத்தை பிளஸ்ஸி இயக்கி உள்ளார் என்பதும் சுனில் ஒளிப்பதிவில் ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தமிழில் ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.