close
Choose your channels

இசைஞானி இசையில், ஸ்வேதா மேனன் குரலில் உருக வைக்கும் பாடல்.. 'ஆர் யூ ஓகே பேபி' சிங்கிள்..!

Thursday, September 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் ’ஆர் யு ஓகே பேபி’. இந்த படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது

இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்த இந்த பாடலை ஸ்வேதா மேனன் உருக வைக்கும் அளவுக்கு பாடியுள்ளார் என்பதும் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆகும் மகிழ்ச்சியில் பாடும் இந்த பாடல் முதல் முறை கேட்கும்போது மனதை நெகிழ வைத்தது என்றும் இந்த பாடலை கேட்டவர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இந்த பாடலை இசைஞானி இளையராஜாவே எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

சமுத்திரகனி, அபிராமி, மிஷ்கின், ஆடுகளம் நரேன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவும், பிரேம்குமார் படத்தொகுப்பு செய்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசைஞானி இளையராஜாவின் ஒரு அருமையான மெலடி பாடலை கேட்ட திருப்தி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் சில வரிகள் இதோ:

அன்னை தந்தை ஆக்குவது யார்
பிள்ளை அன்றோ
இல்லை என்றால் பெற்றோர் பிறப்பு
மண்ணில் அன்றோ
வெண்ணிலவுக்கு வானில் மின்ன
பிள்ளை நிலவு கையில் துள்ள
அம்மா.. என்னும் பிஞ்சுமொழி கேட்க வரும் ஏங்கிடுதே..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.