close
Choose your channels

நான் மார்க்கெட்டை இழக்க இதுதான் காரணம்: ஆக்சன்கிங் அர்ஜூன்

Thursday, December 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆக்சன் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல அவதாரங்கள் எடுத்து வந்த ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் கடந்த ஆண்டு வெளியான 'இரும்புத்திரை' படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார். அதன் பின்னர் சமீபத்தில் வெளியான ’ஹீரோ’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. ஒரு சில விமர்சகர்கள் சிவகார்த்திகேயனை விட அர்ஜூன் இந்த படத்தில் நன்றாக நடித்திருப்பதாக விமர்சனம் செய்ததே அவரது நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியபோது ’தன்னுடைய மார்க்கெட் இடையில் சில காலங்கள் சரிய நேர்ந்தது எதனால் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்தார். சிறிய வயதிலேயே நடிக்க வந்து விட்டதால் நடிப்பதற்கு ஆரம்பத்தில் சிரமப்பட்டதாகவும், ஆனால் அதன் பின்னர் சிவாஜி, நாகேஷ் ஆகியோர்களின் படங்களை பார்த்து நடிக்கக் கற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

ஆனால் ஒரே மாதிரி படங்களில் தொடர்ந்து நடித்ததே மார்க்கெட்டை இழக்க காரணம் என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டதாகவும், அதன் பின்னர் சுதாரித்து இயக்கம், தயாரிப்பு என கவனம் செலுத்தி இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற்றதாகவும் கூறினார்.

மேலும் புரூஸ் லீயின் படங்களைப் பார்த்து தான் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் வந்ததாகவும், தான் புரூஸ் லீயின் மிக தீவிர ரசிகர் என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.