close
Choose your channels

ஓகே கண்மணி' பாடலை சிம்புவுக்கு பயன்படுத்திய ரஹ்மான்

Friday, December 9, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஒரு முக்கிய காரணம் என்பது அனைத்து விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர். குறிப்பாக 'அவளும் நானும்' பாடலின் மெட்டும், வரிகளும், அவற்றை கவுதம் மேனன் படமாக்கிய விதமும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது.

இந்நிலையில் இந்த பாடல் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்திற்காக ரஹ்மான் கம்பாஸ் செய்ததாகவும், ஆனால் படத்தை பார்த்த பின்னர் 'அவளும் நானும்' பாடல் அந்த படத்திற்கு பொருந்தவில்லை என்பதை உணர்ந்து பின்னர் 'ஏய் சினாமிகா' என்ற பாடலை கம்போஸ் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்கு பாடல்கள் கம்போஸ் செய்தபோது கவுதம் மேனனிடம் 'அவளும் நானும்' பாடலின் மெட்டை போட்டு காட்டியதாகவும், அவர் சந்தோஷமாக இந்த பாடலை பயன்படுத்த ஒப்புக்கொண்டதால் இந்த பாடல் இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.