close
Choose your channels

பாதுகாப்பு பலராய்வு அதிகாரியாக அருண்விஜய் நடித்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Friday, February 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஆண்டு அருண் விஜய் நடித்த ’ஓ மை டாக்’ ’யானை’ மற்றும் ’சினம்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் அருண் விஜய் நடித்த ’பார்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் ’ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பார்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ரிலீஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரான நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது பிப்ரவரி 24ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் செய்தியுடன் கூடிய புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

பாதுகாப்பு பலராய்வு அதிகாரி அர்விந்த் சந்திரசேகர் என்ற கேரக்டரில் அருண் விஜய் நடித்த இந்த படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைப்பில், ராஜசேகர் ஒளிப்பதிவில், பாபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ’பார்டர்’ திரைப்படம் அருண் விஜய்க்கு இந்த ஆண்டின் முதல் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அருண் விஜய் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.