close
Choose your channels

பிக்பாஸ் ஜனனியின் அடுத்த படம் குறித்த தகவல்

Wednesday, January 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் இரண்டாம் சீசனில் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி. இறுதிச்சுற்றுக்கு ஒரு வாரம் முன்பு வெளியேறி வெற்றியாளர் பட்டத்தை ஜனனி நூலிழையில் தவறவிட்டாலும் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல திரைப்படங்களின் வாய்ப்பு ஜனனியை தேடி வந்தபோதிலும், தனக்கேற்ற நல்ல கதைக்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில் விளம்பர படங்கள் இயக்கி திரையுலகில் இயக்குனராக காலடி எடுத்து வைத்திருக்கும் சந்தீப் ஷ்யாம் இயக்கும் ஒரு திரைப்படத்தில் ஜனனி நடித்து வருகிறார். இந்த படத்தின் ஹீரோவாக அசோக்செல்வன் நடிக்கின்றார். ஏற்கனவே அசோக்செல்வன், ஜனனி இருவரும் 'தெகிடி' படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மர்மமான கொலை ஒன்றை துப்பறியும் த்ரில் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் டைட்டில் உள்பட மற்ற விபரங்கள் விரைவில் அறிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.