close
Choose your channels

கடைசியில அசீம்-விக்ரமன் சண்டைக்கு இவங்க தான் காரணமா?

Wednesday, November 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிய்ல் இந்த வாரம் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த டாஸ்க் முதலில் ஜாலியாக சென்று கொண்டிருந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக ராஜாவாக நடிக்கும் ராபர்ட் மாஸ்டர் ராணியாக நடிக்கும் ரக்சிதாவிடம் தன்னுடைய ரொமான்ஸ் வேலையை காட்டத் தொடங்கியதால் இந்த டாஸ்க் முழுவதுமே கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென விக்ரமன் மற்றும் அசீம் இடையே மோதல் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணி சாப்பிடும் சாப்பாட்டில் உப்பு அதிகம் போட்டதால் தான் பிரச்சனை வெடித்ததாக தெரிகிறது. இதனால் அசிம் மற்றும் விக்ரமன் ஆகிய இருவரும் இரண்டாவது புரமோவில் ஆவேசமாக மோதிக்கொண்ட காட்சிகள் இருந்தன என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த சண்டை மூன்றாவது புரமோவிலும் தொடர்கிறது. அசீமுக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தது யார்? இதை தட்டிக்கேட்க யாருமே இல்லையா? என விக்ரமன் கேட்க அதற்கு அசீம், வெளியே போய் பேசுய்யா என்று மீண்டும் மரியாதை இல்லாமல் பேசுகிறார்.

இந்த நிலையில் ’இது எல்லாத்துக்கும் காரணம் நீங்கள்தான், நீங்கள்தான் உப்பு அதிகமாக போட்டீர்கள் என ஷிவின் மீது அசீம் குற்றச்சாட்டு வைக்கிறார். அதற்கு ஷிவின், ‘நான் உப்பு போட்டது உண்மைதான், நான் தப்பை ஒத்துக் கொண்டேன் என ஆவேசமாக கூறுவதுடன் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில அசீம்-விக்ரமன் சண்டைக்கு ஷிவின் தான் காரணம் என்று தெரிய வந்துள்ள நிலையில் உண்மை நிலை என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.