close
Choose your channels

தனலட்சுமி 'பளார்' என்ற அறை வாங்குவார் என கமல் முன் கூறிய அசீம்! என்ன காரணம்?

Saturday, November 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனலட்சுமி இங்கே நடந்து கொள்வது போன்று வெளியில் நடந்து கொண்டால் ‘பளார்’ என்று அறை தான் வாங்குவார் என கமல்ஹாசன் முன்னிலையில் அசீம் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில் தற்போது தான் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பை எட்டியுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த வாரம் அளிக்கப்பட்ட டாஸ்க் மூலம் போட்டியாளர்களின் உண்மையான முகம் வெளியே தெரிந்தது என்பதும் குறிப்பாக தனலட்சுமி, அமுதவாணன் உள்ளிட்டோர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் முன்னிலையில் போட்டியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் முதல் கேள்வியாக, ‘அமுதவாணன் இந்த வீட்டில் பேர்சனல் அட்டாக் செய்கிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டு இதற்கு ஆம் அல்லது இல்லை என்று பதில் கூறும்படி கேட்கப்படுகிறாது. இதில் ‘ஆம்’ என்று கூறிய விக்ரமன், ‘நகைச்சுவை என்ற பெயரில் அமுதவாணன் பெர்சனல் அட்டாக் செய்கிறார் என்றும், குறிப்பாக நான் வாயை திறந்தாலே பொய் என்று என்னிடம் வெளிப்படையாகவே கூறுகிறார் என்று கூறினார்.

இதனை அடுத்து அடுத்த கேள்வியாக ’தனலட்சுமி இங்கே நடந்து கொள்வது மாதிரி வெளியே நடந்து கொண்டால் பளார் என்று அறை தான் வாங்குவார்’ என்று கேட்கப்பட இதற்கு எத்தனை பேர் ‘ஆம்’ என்றும் ‘இல்லை’ என்றும் கூறுகிறார்கள்? தனலட்சுமி குறித்து யார் யார் என்னென்ன சொல்லி இருப்பார்கள்? என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.