close
Choose your channels

'KH234' போஸ்டரில் உள்ள பாரதியார் கவிதையை கவனித்தீர்களா?  என்ன சொல்ல வருகிறார் மணிரத்னம்?

Monday, November 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல்ஹாசன் 234’ திரைப்படத்தின் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது என்பதை பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இந்த போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த போஸ்டரில் மறைமுகமாக சில வரிகள் தலைகீழாக அதாவது மிரரில் இருந்து பார்க்கும் வகையில் உள்ளது. அதில் பாரதியார் கவிதை உள்ளது என்பதை நுணுக்கமாக பார்த்தால் கண்டுபிடிக்கலாம்.

காலா உனைநான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட(காலா) என்ற பாரதியார் கவிதை தான் இதில் தலைகீழாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதியாரின் அந்த கவிதையின் முழு வடிவம் இதுதான்:

காலா உனைநான் சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா சற்றே உனை மிதிக்கிறேன் அட(காலா)

வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் நல்ல வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் துதிக்கிறேன் ஆதி

மூலா வென்றுாகதறிய யானையைக் காக்கவே நின்றன் முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட மூடனே ? அட (காலா)

ஆலாலமுண்டவனடி சரணென்றமார்க்கண்ன் தன தாவி கவரப்போய் நீ பட்டபாட்டினை யறிகுவேன் இங்கு

நாலாயிரம் காதம் விட்டகல் உனைவிதிக்கிறேன் ஹரி நாராயண னாநின் முன்னே உதிக்கிறேன் அட(காலா)

இந்த கவிதை மூலம் இயக்குனர் மணிரத்னம் கமல்ஹாசனின் கேரக்டரை மறைமுகமாக தெரிவித்துள்ளாரா? என்பது இன்று மாலை வெளியாகும் டைட்டில் போஸ்டரில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.