close
Choose your channels

மாடி தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்து பொங்கல் கொண்டாடிய தமிழ் நடிகை!

Saturday, January 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாடியில் போட்ட தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்து பொங்கல் கொண்டாடிய நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அது குறித்த வீடியோவை வெளியிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் நடிகையுமான ரம்யா பாண்டியன் தனது வீட்டில் மாடியில் போட்ட தோட்டத்தில் விளைந்த மஞ்சள் அறுவடை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பொங்கலை முன்னிட்டு வளமான விளைச்சலைத் தந்த இயற்கை அன்னைக்கு தனது நன்றியை செலுத்தி கொள்வதாகவும் இந்த நன்னாளில் எனது மாடித் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்ததை அளவற்ற மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்றும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். ரம்யா பாண்டியனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கீர்த்தி பாண்டியன் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ரம்யா பாண்டியன் நடித்த ’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர், ’இடும்பன்காரி’ என்ற தமிழ் திரைப்படத்திலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.