close
Choose your channels

அனிதா, சுரேஷ் ரெண்டு பேரும் புரமோவுல ஜெயிச்சிட்டாங்க!

Thursday, October 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காம் சீசனில் வந்திருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் கடந்த 3 சீசன்களையும் பலமுறை பார்த்து, பயிற்சி எடுத்து வந்து இருப்பார்கள் போல் தெரிகிறது. குறிப்பாக ஒரு மணி நிகழ்ச்சியில் நம்முடைய முகம் அதிகமாக தெரிவதைவிட புரமோவில் வந்தால்தான் நாம் புகழ் பெற முடியும் என்ற தந்திரத்தை புரிந்து கொண்டுள்ளனர்

இதனை முதல் கட்டத்திலேயே செயல்படுத்தியவர்கள்தான் அனிதா மற்றும் சுரேஷ் போல் தெரிகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி பேசிக்கொண்டிருப்பதை பார்த்தால் அவர்கள் நினைத்தபடியே தற்போது அனைத்து புரமோக்களிலும் வந்து கொண்டிருக்கின்றார்கள்

முதல் நாளிலிருந்தே கலக்கிக் கொண்டிருந்த அறந்தாங்கி நிஷா தற்போது ஓரம் கட்டப்பட்டு பிக்பாஸ்ஸின் முழு கவனம் தற்போது அனிதா, சுரேஷ் மீது விழுந்துள்ளது. அந்தவகையில் நேற்று ஒளிபரப்பான மூன்று புரமோவிலும், இன்று வெளியான இரண்டு புரமோவிலும் அவர்கள் இருவருமே ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் சுரேஷ் ’நான் கடுமையான போட்டியாளராக இருந்து போராடி, யார் வெற்றி பெற்றாலும் நானே வெற்றி பெற்றது போல் பாராட்டு தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் நான் யாரையாவது மன காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் எச்சில் தெறிப்பதில் ஆரம்பித்த இந்த சண்டை இப்போதைக்கு முடியாது போல் தான் தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.