close
Choose your channels

யாஷிகாவை மாட்டிவிட்டவரா பாலாஜி முருகதாஸ்? தோண்ட தோண்ட கிளம்பும் மர்மம்!

Monday, October 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் கடந்து வந்த பாதை என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று கதையை கூறியபோது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண் கலங்கினர் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் ’ஒரு குழந்தையை பெற்று சரியாக வளர்க்க முடியவில்லை என்றால் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள்’ என கூறியது பொறுப்பற்ற பெற்றோர்களுக்கு சாட்டையடியாக இருந்தது

ஆனால் பாலாஜி முருகதாஸின் முகத்திரை ஒரு சில நாட்களிலேயே கிழிந்துவிட்டது. அப்பா அம்மாவை குடிகாரர்கள் என்று கூறிய பாலாஜியும் குடிகாரர் தான் என்றும் பீர் பாட்டிலை எடுத்து தன் தலையில் ஊற்றிக் கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனதில் இருந்து தெரிய வந்தது

இந்த நிலையில் தற்போது அவர் குறித்து மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒரு நிறுவனத்தை டுபாக்கூர் நிறுவனம் என்று பாலாஜி கூறியதும் அதற்கு சனம்ஷெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரிந்ததே. இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் ஜோ மைக்கல் இதுகுறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்

பாலாஜி முருகதாஸ் தங்கள் நிறுவனத்தை தரக்குறைவாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் பாலாஜி முருகதாஸ் யாஷிகா ஆனந்தின் நண்பர் என்றும் கடந்த ஆண்டு அவர் போதையில் காரை ஓட்டிச்சென்று ஓரு விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓடிப்போய்விட்டதாகவும், அதன் பின் அவர் யாஷிகாவுக்கு போன் செய்ததாகவும் விபத்து நடந்த இடத்திற்கு யாஷிகா வந்தவுடன் அவர் தான் விபத்தை ஏற்படுத்தியது என மீடியா செய்தி வெளியிட்டுவிட்டனர் எனவும் ஜோ மைக்கேல் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.