close
Choose your channels

மாலத்தீவு செல்லவிருந்த திட்டத்தை கேன்சல் செய்துவிட்டேன்: பிக்பாஸ் தொகுப்பாளர் பேட்டி..!

Monday, January 15, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் குடும்பத்துடன் மாலத்தீவு சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டு இருந்தேன். ஆனால் தற்போது அந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவு செல்கிறேன் என தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு மாதங்களாக ’பிக் பாஸ்’ மற்றும் ’நா சாமி ரங்கா’ ஆகிய நிகழ்ச்சிகளுக்கு இடைவெளியின்றி உழைத்தேன். அதனால் நான் குடும்பத்துடன் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்ல டிக்கெட் புக் பண்ணி இருந்தேன். ஆனால் தற்போது அந்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு அடுத்த வாரம் லட்சத்தீவு செல்ல உள்ளேன் என்று நாகார்ஜுனா கூறியுள்ளார்.

நம்முடைய பிரதமரை மாலத்தீவு அமைச்சர்கள் தவறாக பேசியுள்ளனர். அதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவேதான் நான் மாலத்தீவு செல்லும் முடிவை ரத்து செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்

150 கோடி மக்களை வழிநடத்தும் நமது பிரதமர் பற்றி மாலத்தீவு அமைச்சர்கள் பேசி பின் விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ என்று நடிகர் நாகார்ஜுனா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.