close
Choose your channels

இரண்டு முறை அதிகரித்த பிக்பாஸ் பணப்பெட்டி தொகை: எத்தனை லட்சம் தெரியுமா?

Wednesday, January 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரே வாரத்தில் முடிவடையவுள்ள நிலையில் இந்த போட்டியில் தற்போது 7 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் பிக்பாஸ் தரும் பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறலாம் என்ற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று சரத்குமார் அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து மூன்று லட்ச ரூபாய் பணப் பெட்டியை வைத்துவிட்டு சென்றார் என்பதும் தாமரை, நிரூப், பாவனி உள்பட அந்த பெட்டியை எடுக்க யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பணப்பெட்டியின் மதிப்பு 3 இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ஆகவும், அதன் பின்னர் 7 லட்சமாகவும் மாறி உள்ளது. இரண்டு முறை பண பெட்டியில் உள்ள தொகை மாறிய போதிலும் அந்த பெட்டியை எடுத்துக் கொள்ள தற்போதைக்கு யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இன்று வெளியான புரமோவில் எத்தனை லட்சம் வந்தாலும் எடுக்க மாட்டேன் என தாமரையும், 40 லட்சம் வந்தால் எடுத்து கொள்வேன் என பிரியங்காவும், 15 லட்சம் வந்தால் நான் யோசிப்பேன் என பாவனியும் கூறி வருகின்றனர். 25 லட்சம் வரை போகும் என நிரூப் கூறுகிறார். மொத்தத்தில் இன்னும் தொகை அதிகரிக்க அதிகரிக்க போட்டியாளரின் மனம் மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.