close
Choose your channels

வெறித்தனமான கட்டிப்பிடி: சனம்ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்?

Thursday, October 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த ஒரு டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் உள்ள இருவரையும் வரும் வாரம் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது என பிக்பாஸ் அறிவித்தார். இந்த வெற்றியால் துள்ளி குதித்த வேல்முருகன் தனது கூட்டாளி சனம்ஷெட்டியை கட்டிப் பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

சனம் ஷெட்டியை முதல் நாளில் இருந்தே சகோதரி என்று தான் வேல்முருகன் அழைத்து வருகிறார் என்பதும் அண்ணா என்று அன்புடன் சனம்ஷெட்டியும் பதிலுக்கு அழைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இருவரும் ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாடலுக்கு நடனமாடியபோது கூட எல்லை மீறவில்லை.

ஆனால் நேற்று வேல்முருகன், வெறித்தனமாக சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது சனம்ஷெட்டியையே கொஞ்சம் நெளிய வைத்தது. மேலும் பார்வையாளர்களும் வேல் முருகன் கொஞ்சம் கொஞ்சம் ஓவராக போகிறாரோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் சகோதரி போல் என்றாலும் இப்படி வெறித்தனமாகவா கட்டிப்பிடிப்பது என்று பார்வையாளர்களும் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்

ஒரு சின்ன விஷயத்தை கூட ஊதி பெரிதாக்கும் சனம்ஷெட்டி இந்த விஷயத்தையும் பெரிதாக்குவாரா? அல்லது அவருக்கு பாலாஜி மட்டும் தான் டார்கெட்டா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.