close
Choose your channels

பிக்பாஸ் கொடுமைப்படுத்தினார், கமலும் கண்டிக்கவில்லை: மதுமிதா போலீஸ் புகார்

Wednesday, September 4, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை மதுமிதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுமிதா தனது புகார் மனுவில், ‘பிக்பாஸ் வீட்டில் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பியதாகவும், சக போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதை தொகுப்பாளர் கமலும் கண்டிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புகாரின் மீது போலீசார் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றின்போது மதுமிதா காவிரி பிரச்சனை குறித்து பேசியதற்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஷெரின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது உணர்ச்சிவசப்பட்ட மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிகளை மீறியதாக மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிக்பாஸ் நிர்வாகத்தினர்களிடம் சம்பளம் கேட்டு மதுமிதா பயமுறுத்தியதாக பிக்பாஸ் நிர்வாகத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இந்த புகாரின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே பிக்பாஸ் மீதும் கமல் மீதும் மதுமிதா புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.