close
Choose your channels

கவினுக்கு திடீரென ஆதரவு தெரிவித்த சாக்சி!

Saturday, August 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒருசில நாட்கள் மட்டுமே காதலர்களாக இருந்த கவின் - சாக்சி இடையே திடீரென பிளவு ஏற்பட்டு காதல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் கவினை சாக்சி கடுமையாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் கவின் தாயார் உள்பட மூன்று பெண்கள் ஒரு வழக்கில் தண்டனை பெற்ற நிலையில் கவினையும் அவருடைய குடும்பத்தினர்களையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவினுக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆதரவளிக்கும் வகையில் சாக்சி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:

கவின் குடும்பத்தினர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணமான சூழலில் கவினையும் அவரது குடும்பத்தினரையும் யாரும் கிண்டலடிக்க வேண்டாம். எனக்கும் கவினுக்கும் தான் பிரச்சினை, அவருடைய குடும்பத்தினர்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே எனது ரசிகர்கள் கவின் குடும்பத்தினர்களை கிண்டலடிக்க வேண்டாம் மாறாக அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று சாக்சி கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.