close
Choose your channels

கோரத்தாண்டவம் ஆடும் லாஸ்லியா-சாக்சி: வேடிக்கை பார்க்கும் கவின்-சேரன்

Friday, September 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது கொடுத்ததை அடுத்து அந்த விருதை சாக்சியிடம் வாங்கி தூக்கி எறிந்தார் லாஸ்லியா. இதனால் மோகன் வைத்யாவும் சாக்சியும் கோபம் அடைய அதற்கு லாஸ்லியா பதிலடி கொடுப்பது போல் இருந்தது.

அதேபோல் இன்று வெளியாகியுள்ள அடுத்த புரமோவிலும் இதன் தொடர்ச்சிதான் உள்ளது. ‘எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை நாங்கள் செய்கிறோம், உனக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கி வெளியே போடு’ என்று மோகன் வைத்யா கூறுகிறார். ஒரு பெரிய மனிதன் ஸ்தானத்தில் இருக்கும் மோகன் வைத்யா, 'இப்படி ஒரு விருதை யாருக்கும் கொடுத்தாலும் அவர் மனம் புண்படும் என்று அந்த விருதை கொடுக்க மாட்டேன்’ என்று மறுக்காமல், பழிவாங்குவதற்காகவே சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் சாக்சியுடன் சேர்ந்து கொண்டு அவர் பேசுவது அவரது வயதுக்கும் மரியாதைக்கும் உகந்தது அல்ல என்பதே பார்வையாளர்களின் எண்ணமாக உள்ளது.

இந்த நிலையில் சாக்சியும் லாஸ்லியாவும் ஆவேசமாகவும் காரசாரமாகவும் வாதாடுகின்றனர். இந்த சண்டையை லாஸ்லியாவுக்கு நெருக்கமான சேரனும் கவினும் வேடிக்கை பார்க்கின்றனர். கவின் இந்த சண்டையில் நுழைந்தால் விபரீதமாகிவிடும் என்று தெரிந்து வேறு வழியின்றி பேசாமல் இருக்கின்றார். ஆனால் சேரனுக்கு என்ன ஆச்சு? தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் அமைதியாக உட்கார்ந்திருக்கின்றார். அதைவிட ஒரு ஆச்சரியம் என்னவெனில் எந்தவொரு சிறு பிரச்சனையென்றாலும் வலிய போய் மூக்கை நுழைக்கும் வனிதா கூட அமைதியாக இருப்பது, இந்த சண்டை லாஸ்லியாவுக்கு எதிராக திட்டமிட்டதோ? என சந்தேகப்பட வைக்கின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.