close
Choose your channels

என்னால கூச்சமே இல்லாம மேடையில நிக்க முடியாது: கவின்

Thursday, September 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் ரூ.5 லட்சத்தை பெற்றுக்கொண்டு உடனே வெளியேறலாம் என்ற ஒரு வாய்ப்பை நேற்று பிக்பாஸ் வழங்கியவுடன் கவினை தவிர மற்ற போட்டியாளர்கள் யாரும் அந்த அறிவிப்பை கண்டு கொள்ளவில்லை.

ஆனால் கவின் சற்றும் யோசிக்காமல் ‘நாம் போறேன் தல’ என்று கூறி அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக லாஸ்லியா, சாண்டி கவினின் முடிவுக்கு அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் கவின் இருவரையும் சமாதானம் செய்தார். தான் வெளியே செல்வதற்கான காரணத்தை விளக்குவதாகவும் அவர் கூறினார்.

இன்றைய புரமோவில் ‘ஏன் திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்தாய்’ என்ற சாண்டியின் கேள்விக்கு ‘என்னால் இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டு மேடையில் நிக்க முடியாது’ என்று கூறுகிறார். அவர் எந்த விஷயத்தை கூறுகிறார் என்பதை ஊகிக்க முடிகிறது. மேலும் எல்லோரும் சொன்னபடி இந்த கேமை கேமாக பாருங்கள். இன்னும் பத்து நாள் தான் முடித்துவிட்டு வெளியே வாருங்கள், பேசிக்கொள்ளலாம்’ என்று சாண்டியை சமாதானப்படுத்துகிறார் கவின். சாண்டி சமாதானம் அடைந்த மாதிரி தெரியவில்லை என்றாலும் கவின் தனது முடிவில் மன உறுதியுடன் இருப்பது போல் தெரிகிறது.

கவினின் இந்த முடிவுக்கு காரணம் பொருளாதார பிரச்சனையா? நண்பர்களுக்கு விட்டுக்கொடுப்பதற்காக எடுத்த முடிவா? தான் செய்த தவறுகளுக்கு பிராயசித்தமா? என்பதை இன்றைய நிகழ்ச்சியின் முடிவில் தெரியவரும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.