close
Choose your channels

நான் அந்த அளவுக்கு கேவலமானவன் இல்லை: ஆரிக்கு ரியோ பதிலடியா?

Monday, January 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேசன் படலம் நடக்கும் நிலையில் இன்று கடைசி நாமினேஷன் படலம் நடைபெறுகிறது. அதற்கான வீடியோ சற்று முன் வெளியான நிலையில் ஆரி முதல் நபராக வந்து ரியோவை நாமினேட் செய்கிறார். நானும் பாலாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு சில விஷயங்களை ரியோ கூறினார். அது குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்டபோது அவரது விளக்கம் எனக்கு முழு திருப்தி இல்லை. அதனால் அவரை நான் நாமினேட் செய்கிறேன் என்று கூறினார்

அடுத்து வந்த சோம்சேகர் பாலா மற்றும் ஆரி ஆகிய இருவரையும் நாமினேட் செய்வதாகவும் ஆரி கோபம் நல்லது இல்லை என்றும் அதை தவிர்க்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன் என்றும் அவர் கூறினார்

அதை அடுத்து நாமினேட் செய்ய வந்த ரியோ, ’பொண்ணு வந்தபோது கூட டாஸ்க்கில் இருந்தேன், இவன் அதை பார்க்காமல் வேறு எதையோ சொல்லி இருக்கானே என்று ஆரி கூறியதாகவும், நான் ஒரு இடத்தில் தப்பாக தெரிய வாய்ப்பு இருக்கிறது என்றும், நான் அந்த அளவுக்கு கேவலமானவன் இல்லை என்றும் ஆரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்

இதனையடுத்து இன்றைய நாமினேஷனில் பாலா மற்றும் ஆரி நாமினேஷன் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. வேறு யார் யார் நாமினேஷன் பட்டியலில் உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.