close
Choose your channels

ஷிவானி கூட நிக்க வச்சு கேள்வி கேட்குறாங்கப்பா: பைத்தியம் பிடிக்கும் நிலையில் ரியோ!

Thursday, November 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒரு போட்டியாளரை ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு டார்கெட் செய்வது அதிகமாகி வருகிறது, முதலில் ஆரியை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சேர்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து நேற்று பாலாஜியை ரவுண்டு கட்டினர்.

இந்த நிலையில் இன்று சிக்கிய போட்டியாளர் ரியோ. ஏற்கனவே தான் ஒருவர் மட்டுமே அதிபுத்திசாலி என்ற ரீதியில் பேசிவரும் ரியோவிடம் இன்றைய முதல் இரண்டு புரமோவில் அனிதாவும் சனமும் மாறி மாறி கேள்வி எழுப்பி டார்கெட் செய்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது புரமோவில் சனம், ரம்யா, ஷிவானி என மாறி மாறி கேள்வி கேட்கின்றனர். அமைதிப்புறாவாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷிவானியே கேள்வி கேட்டதால் ரியோ கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்தவர் போல் மாறுகிறார். இது போதாதென்று அனிதாவின் பிரச்சனை ஒன்றை சம்யுக்தா, ரியோவிடம் கூறுகிறார். மொத்தத்தில் இன்று ரியோ வச்சு செய்யப்படுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.